அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குவாண்டம் உயிரித் தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு மும்பையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:41PM by PIB Chennai

இந்தியாவின் தேசிய குவாண்டம் இயக்கத்திற்கு இணங்ககுவாண்டம் அறிவியலை நோயறிதல்உயிர்மருத்துவப் படமாக்கல்மருந்து கண்டுபிடிப்புதுல்லிய மருத்துவம் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்துவதற்காககுவாண்டம் உயிரித் தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் குவாண்டம் அறிவியல்உயிரி அறிவியல் வல்லுநர்கள்ஆராய்ச்சியாளர்கள்மருத்துவர்கள்தொழில்துறைத் தலைவர்கள்புத்தொழில் நிறுவனத்தின்மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மும்பை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டின் தொடக்க அமர்வில் சிறப்புரையாற்றியஅறிவியல்தொழில்நுட்பத் துறையின் செயலாளர் திரு உமேஷ் வி வாக்மரேகுவாண்டம் உயிரித் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குவாண்டம் உயிரித் தொழில்நுட்பமானதுகுவாண்டம் உணர்தல்பிம்பமாக்கல்கணினி அறிவியல் ஆகியவற்றுடன் உயிரி அறிவியல் சந்திக்கும் இடம் என்று அவர் கூறினார்.

இந்தத் துறையில் தேசிய அளவிலான ஆராய்ச்சிகளை வரையறுப்பதற்கும்ஆய்வகங்களிலிருந்து களத்தில் பயன்படுத்தக்கூடிய சுகாதாரத் தொழில்நுட்பம் வரையிலான பாதையை வலுப்படுத்துவதற்கும் ஒரு பல்துறை தளமாக இந்த மாநாடு நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304999&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305163) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी