உரங்கள் துறை
azadi ka amrit mahotsav

மத்திய உரத் துறை, நாளை முதல் செப்டம்பர் 15 வரை தூய்மை இயக்கத்தை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:34PM by PIB Chennai

மத்திய உரத் துறை, 2026 செப்டம்பர் 1 முதல் 15 வரை 'ஸ்வச்சதா பக்வாடா-2026' எனப்படும் தூய்மை இயக்கத்தை கடைபிடிக்க உள்ளது. நாடு தழுவிய இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம்பணியிடங்களில் தூய்மையை அதிகரிப்பதுசுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதுபணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துவது ஆகியவை ஆகும். இந்த ஆண்டுநேரடித் தூய்மையுடன்நிர்வாகத் திறன்வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தவும்மின்-பதிவு முறையை மேலும் வலுப்படுத்தவும்  டிஜிட்டல் தூய்மைஆவண மேலாண்மை ஆகியவற்றுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நவீன நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டுஉரங்கள் துறை டிஜிட்டல் தூய்மைக்காக ஒரு பிரத்யேக உத்தியை வகுத்துள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ்மின்-அலுவலகமும் டிஜிட்டல் கோப்பு அமைப்புகளும் சீரமைக்கப்படும். இதில் நிலுவையில் உள்ள டிஜிட்டல் மின்-கோப்புகளை மதிப்பாய்வு செய்தல்தீர்க்கப்பட்ட குறைகளை டிஜிட்டல் முறையில் முடித்து வைத்தல்தரவுத்தளங்களை முறைப்படுத்துதல் ஆகியவை அடங்கும். மேலும்பணி இடத்தை உகந்ததாக்குவதற்காகதுறைப் பணியாளர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் இன்பாக்ஸ்களில் இருந்து தேவையற்றகாலாவதியான கோப்புகள் / இணைப்புகளை நீக்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மத்திய உரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டாவின் செய்தியுடன் இந்தத் தூய்மை இயக்கம் தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304992&reg=3&lang=1

***

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305158) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी