பிரதமர் அலுவலகம்
துணிச்சல், விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 AUG 2026 9:51AM by PIB Chennai
ஒருவரது சூழ்நிலை பாதகமாக மாறும்போது துணிச்சலை இழக்கக்கூடாது, ஏனென்றால் பொறுமையும், விடாமுயற்சியும் இழந்ததை மீண்டும் பெற உதவும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கடலின் நடுவே கப்பல் உடைந்தாலும் ஒரு திறன்மிக்க மாலுமி நம்பிக்கையை இழக்காமல் நீந்தி உயிர் தப்ப முயற்சிப்பதை போல் உறுதியும், விடாமுயற்சியும் ஒருவரது துயரத்தை வெல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்- ஒருவருடைய சூழ்நிலை பாதகமாக மாறினாலும் பொறுமையை இழக்கக்கூடாது. ஏனென்றால், பொறுமையின் வாயிலாக சாதகமான சூழ்நிலையை மீண்டும் பெறமுடியும். இது, ஒரு திறன்மிக்க மாலுமி கடலின் நடுவில் தன்னுடைய கப்பல் உடைந்தாலும், மனம் தளராமல் உயிர் பிழைப்பதற்காக நீந்துவது போன்ற முயற்சியில் மட்டும் தன் முழு கவனத்தை செலுத்துவதை போன்றதாகும்.
(Release ID: 2293568)
***
VJ/PD/IR/SM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2293843)
வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam