உரங்கள் துறை
உரப் பாதுகாப்பை அதிகரிக்க உள்நாட்டு உர உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை அரசு வலுப்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
24 JUL 2026 3:59PM by PIB Chennai
உள்நாட்டு உர உற்பத்தியை வலுப்படுத்துவதற்கும், மூலப்பொருள் மற்றும் உர இறக்குமதி ஆதாரங்களை பன்முகப்படுத்துவதற்கும், சர்வதேச சந்தைகளில் உலகளாவிய விநியோக இடையூறுகள் மற்றும் நிலையற்ற தன்மை இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு உரங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசு தொடர்ச்சியான உத்திசார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உர அலகுகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, உர உற்பத்தியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பொதுவாக மூலப்பொருட்கள் கிடைப்பது, சர்வதேச விலையில் ஏற்படும் நிலையற்ற தன்மை மற்றும் தொழில்நுட்ப முடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன. இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்காக, உகந்த உள்நாட்டு உற்பத்தியை பராமரிக்க, பன்முகப்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் தீவன ஆதாரங்களை அரசு கொண்டுள்ளது.
உர விநியோகச் சங்கிலிகளை மேலும் வலுப்படுத்த, உரங்கள் துறை இறக்குமதி ஆதாரங்களை பன்முகப்படுத்தியுள்ளதுடன், கூடுதல் விநியோகஸ்தர்களை அடையாளம் காண இந்திய தூதரகங்களைத் தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளது. இதன் விளைவாக, 2026 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் உலகளாவிய டெண்டர்கள் மூலம் முறையே 25 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 17.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா பெறப்பட்டது. இந்த முன்முயற்சிகள் உலகளாவிய சந்தை இடையூறுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, நாடு முழுவதும் தொடர்ந்து உரங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288855=48&lang=1
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2289080)
आगंतुक पटल : 15