உள்துறை அமைச்சகம்
பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு - ஜூலை 6, 7 தேதிகளில் குவஹாத்தியில் நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
05 JUL 2026 12:14PM by PIB Chennai
2026 ஜூலை 6 முதல் 7 வரை அசாமின் குவஹாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா நடத்தவுள்ளது. இந்தக் கூட்டம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் ஒன்றிணைத்து, போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கு இடையே ஆழமான ஒத்துழைப்பை வளர்க்க வழிவகுக்கும்.
உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் சூழல் குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளது. இவை சிக்கலான நாடுகடந்த சவால்களை முன்வைக்கின்றன. அதே நேரத்தில், மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றால் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க முடியும். செயல்பாட்டுக் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், புலனாய்வுத் தகவல்களைப் பகிர்தல், திறன் மேம்பாடு, போதைப்பொருள் தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பினால் நடத்தப்படும் இந்தக் கூட்டம், மூன்று முக்கிய முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்தும்:
I. செயற்கை போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுதல்.
II. புலனாய்வுத் தகவல் பகிர்வையும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துதல்.
III . திறன் மேம்பாடும் நிறுவன ஒத்துழைப்பும்
இரண்டு நாள் கூட்டத்தின் போது, உறுப்பு நாடுகள் தத்தம் நாடுகளில் நிலவும் போதைப்பொருள் சூழல் குறித்து விவாதிக்கும். அத்துடன் உலகளாவிய சவால்களை அடிப்படையாகக் கொண்ட 6 கருப்பொருள் அமர்வுகளும் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281212®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281315)
आगंतुक पटल : 16