ஆயுஷ்
உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி சோவா ரிக்பா தேசிய நிறுவனத்தில் பொது யோகா நெறிமுறை அமர்வு நடத்தப்பட்டது
प्रविष्टि तिथि:
03 JUN 2026 3:06PM by PIB Chennai
உலக சுற்றுச்சூழல் நாள் 2026-க்கான முன்கூட்டிய பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, லடாக்கின் சாபு தாங்கில் உள்ள சோவா ரிக்பா தேசிய நிறுவனம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான வாழ்க்கை முறை முன்முயற்சியின் கீழ் இன்று பொது யோகா நெறிமுறை அமர்வு ஒன்றை நடத்தியது.
“யோகா பயிற்சியை விழிப்புணர்வு மற்றும் குறைந்த நுகர்வு வாழ்வியலுடன் இணைத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். யோகா பயிற்சியின் மூலம் நிலையான வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை இந்த அமர்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.
பயிற்சி பெற்ற யோகா பயிற்றுவிப்பாளர் திரு. கோபால் சர்மா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பங்கேற்பாளர்கள் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டனர். உடல் ஆரோக்கியம், மனநலம் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கிய இச்சமயம், மிஷன் லைஃப் கொள்கைகளையும் வலியுறுத்தியது. தனிமனித நல்வாழ்விற்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை இந்நிகழ்வு சுட்டிக்காட்டியது.
சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் நிலையான வாழ்வு குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இந்நிறுவனம் நடத்தி வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த யோகா அமர்வு அமைந்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268334®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2268652)
आगंतुक पटल : 8