அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை வணிகமயமாக்கும் திட்டம்: தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் - நாக்பூரின் ஐடிடி இன்னோவேஷன் நிறுவனம் இடையே ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 5:03PM by PIB Chennai

இந்தியாவின் தொழில்துறை 4.0 கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், நாக்பூரின் ஐடிடி இன்னோவேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. ‘தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுக்கான சாதனங்களை உருவாக்குதல் மற்றும் வணிகமயமாக்குதல்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த புதிய கூட்டுமுயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்துறை இணையவழிக் கற்றல் சார்ந்த தீர்வுகள், உற்பத்தித் துறையில் வளங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், எரிசக்தி சேமிப்பு மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் உதவும். இந்தத் உள்நாட்டுத் தொழில்நுட்பம், குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களின் தற்போதைய உள்கட்டமைப்பில் எவ்வித இடையூறுமின்றி எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பாதக் கூறுகையில், தொழில்துறை 4.0 தொழில்நுட்பங்கள் உற்பத்திப் பொருளாதாரத்தின் எதிர்காலப் போட்டித்தன்மைக்கு மிக முக்கியமானவை என்றும், இந்த உள்நாட்டுத் தீர்வு வெளிநாட்டுச் சார்பைக் குறைத்து தற்சார்பை வலுப்படுத்த பெரிதும் பங்களிக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265914&reg=3&lang=1  

***

TV/PD/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266042) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी