மக்களவை செயலகம்
மகாராஜா அக்ரசேனின் கோட்பாடுகள் இன்றும் மிகப் பொருத்தமாக உள்ளன: மக்களவை தலைவர்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 10:00PM by PIB Chennai
மகாராஜா அக்ரசேனின் கொள்கைகளான சமத்துவம், உள்ளடக்கம், ஒத்துழைப்பு, கூட்டு பங்கேற்பு ஆகியவை நவீன சகாப்தத்திலும் மிகவும் பொருத்தமானவை என்று மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய நிர்வாக மாதிரியை மகாராஜா அக்ரசேன் நிறுவினார், இது தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அகில் பாரதிய அகர்வால் சம்மேளனத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலக பொறுப்பாளர்களின் தேசிய மாநாடு மற்றும் பதவியேற்பு விழாவில் உரையாற்றிய திரு பிர்லா இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
சுதேசி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் உணர்வை எதிரொலிக்கும் வகையில், இந்தியாவின் முன்னேற்றம் கூட்டு பங்கேற்பு மற்றும் தன்னம்பிக்கையை சார்ந்துள்ளது என்று அவர் கூறினார். அகர்வால் சமூகம் வரலாற்று ரீதியாக இந்த தொலைநோக்குப் பார்வை மற்றும் சித்தாந்தத்துடன் செயல்பட்டு வருவதாகவும், சமூகத்தின் வளர்ச்சி மற்றும் நலனுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு அல்லது சமூகம் நெருக்கடிகளை எதிர்கொண்ட போதெல்லாம், அகர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக திரு பிர்லா மேலும் குறிப்பிட்டார். செல்வம் மற்றும் வளங்களை பொது நலனுக்காக அர்ப்பணிக்கும் பாரம்பரியம் சமூகத்தின் முக்கிய மதிப்புகளுக்குள் ஆழமாக பொதிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது அகர்வால் சமூகம் ஆற்றிய முக்கிய பங்கையும், சுதந்திரத்திற்குப் பின் தொழில்துறை, வர்த்தகம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அதன் பங்களிப்பையும் திரு பிர்லா புகழ்ந்துரைத்தார். நாடு முழுவதும் நிறுவப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் தர்மசாலைகள் தன்னலமற்ற சேவையில் சமூகத்தின் உறுதிப்பாட்டின் நீடித்த அடையாளங்களாக நிற்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கலாச்சார மதிப்புகள் மற்றும் சமூகப் பொறுப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு பிர்லா, அகர்வால் சமூகத்தினர் இன்று அனுபவிக்கும் மரியாதை, பல தலைமுறைகளின் தியாகம், தேசத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கடின உழைப்பின் விளைவாகும் என்றார். இந்த மதிப்புகளை நிலைநிறுத்தவும், சமூகத்தின் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றவும் இளைய தலைமுறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262600®=3&lang=2
***
SS/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262811)
வருகையாளர் எண்ணிக்கை : 16