ஆயுஷ்
ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் மருந்து கட்டுப்பாட்டாளர்கள், பங்குதாரர்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் துவக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 8:59PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் (PCIM&H), 2026 மே 18 முதல் 22 வரை ஐந்து நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்கிறது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி (ASU&H) மருத்துவத் துறையில் பணிபுரியும் மருந்து கட்டுப்பாட்டாளர்கள், அமலாக்க அதிகாரிகள், தரக்கட்டுப்பாட்டுப் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள், அரசு ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்காக இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது.
இந்தத் திட்டம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்து மேம்பாட்டின் ஒழுங்குமுறை, கல்வி, தரக்கட்டுப்பாடு மற்றும் உற்பத்தித் துறைகளுடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஞானம், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் தொழில்முறை ஆற்றல்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் திருமதி ஜஸ்பால் கவுர் பிரத்யோத், நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், நவீன கருவிகள் மற்றும் மேம்பட்ட அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளுக்கான தரநிலைகளை மேம்படுத்துவதில் பிசிஐஎம்&ஹெச் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டினார். ஆயுஷ் மருத்துவ முறைகளின் வளமான பாரம்பரியத்தையும், வளர்ந்து வரும் அவற்றின் உலகளாவிய பயன்பாட்டையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262543®=3&lang=1
(Release ID: 2262543)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2262575)
வருகையாளர் எண்ணிக்கை : 10