குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் முத்ரா திட்டம் தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன்களை வழங்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAR 2026 4:24PM by PIB Chennai

நிதி சேவைகள் துறை  அறிவித்தபடி, பிரதமரின் முத்ரா திட்டம் 08.04.2015 அன்று உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்கள்  அதாவது ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடனை நீட்டிக்கத் தொடங்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள்  மற்றும் நுண் நிதி நிறுவனங்கள், கடன் பெற தகுதியுடைய எந்தவொரு தனிநபர், சிறு வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடன் பெறத் தகுதியானவர்களுக்கு கடன்களை வழங்கும்உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகளில் வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கான திட்டத்தின் கீழ் நான்கு கடன் பிரிவுகளில் விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் உட்பட கடன் பெறலாம்.

இந்தத் திட்டம் சிறு வணிகங்கள், கைவினைப் பொருட்கள், விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் பல பெண்கள் வருமானத்திற்காக நம்பியிருக்கும் பாரம்பரிய நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறது. மேலும், பெரும்பாலும் பிணையம் அல்லது கடன் வரலாறு இல்லாத பெண்கள்,

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பிணையில்லா கடன்களால் பயனடைந்துள்ளனர்.

இந்தத் தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே  மார்ச் 12 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆவ்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240159&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2240282) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी