பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அண்டை நாடுகளின் நலனில் இந்தியா உறுதியாக உள்ளது: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் சேத் பேச்சு

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 7:54PM by PIB Chennai

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகத்தின்  25-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் சேத் உரையாற்றினார்.

 

 பயங்கரவாதத்திற்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை'  கொள்கையைக் கடைப்பிடிக்கும் அதேவேளையில், அண்டை நாடுகளின் நலனில் இந்தியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் உறுதிப்பாட்டை உலகுக்கு உணர்த்திய 'ஆபரேஷன் சிந்தூர்'  நடவடிக்கையை அவர் சுட்டிக்காட்டினார். இது முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத் தளங்களைக் கொண்டு நடத்தப்பட்டது, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புக்கு ஒரு சான்றாகும்.

 

 பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2014-ல் ₹686 கோடியாக இருந்தது, தற்போது 2025-ல் ரூ. 23,622 கோடியாக உயர்ந்துள்ளது. 2026-ல் ரூ.29,000 கோடியாகவும், 2029-க்குள் ரூ.50,000 கோடியாகவும் இதை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புத்தொழில் சூழல் அமைப்பு 2.9 மில்லியனுக்கும் மேலாக வளர்ந்து, உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பங்களாதேஷ் உடனான வர்த்தக உறவு மற்றும் நேபாளத்துடனான கலாச்சார, உள்கட்டமைப்பு ரீதியான பிணைப்புகளை அவர் எடுத்துரைத்தார்.

 

 இந்த நிகழ்வில், 'சமாத்'  எனும் ஏஐ தளமும், ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த கொள்கை ஆவணமும் வெளியிடப்பட்டன. வான்வழி ட்ரோன்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க 'சமாத்' உதவும். மேலும், நடுத்தர நிலை ராணுவத் தலைமையினரிடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டு மனநிலையை உருவாக்க 'ஐஓடிஇபி'  பயிற்சியும் தொடங்கப்பட்டது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238523&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண்:2238523

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2238627) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी