மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

சென்னை, சிதம்பரம் உட்பட நாடு முழுவதும் சுகாதார முகாம்களுடன் உயிர் காக்கும் மருந்துகள் வாரம் 2026 தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2026 7:41PM by PIB Chennai

மலிவான மற்றும் தரமான பொதுவான மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியான உயிர் காக்கும் மருந்துகள் வாரம் 2026, நாடு முழுவதும் சுகாதார பரிசோதனை முகாம்களுடன் தொடங்கியது. இது மார்ச் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படும் 8வது மக்கள் மருந்தக தினத்திற்கு முன்னதாக ஒரு வார கால கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த வாரத்தின் ஒரு பகுதியாக, மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் அமைவனம் (PMBI), மருந்துகள் துறை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஆகியவற்றால் 2026 மார்ச் 1 முதல் 5 வரை நாடு முழுவதும் 250 க்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார பரிசோதனை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் கருப்பொருளான "ஜெனரிக் மருந்துகள் மலிவானது மற்றும் நம்பகமானது, இது ஆரோக்கியம் மற்றும் சேமிப்பு பற்றியது" என்பதன் அடிப்படையில், முகாம்களில் நேரடியாக நோயறிதல் சேவைகளை வழங்குவதுடன்,  பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் (PMBJAK) கிடைக்கும் மலிவான மற்றும் தரமான ஜெனரிக் மருந்துகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

முதல் நாளன்று, சென்னை, சிதம்பரம் மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சுமார் 50 இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டன. சிதம்பரத்தில் நடைபெற்ற முகாமில், சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. ஏ. பாண்டியன், கலந்து கொண்டார். 

மருத்துவ முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஒரு முகாமில் சராசரியாக 100 பேர் வீதம் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளைப் பெற்றனர். முகாம்களில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234273&reg=3&lang=1      

***

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234303) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English