சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அகன்க்ஷா 2026 விருந்தோம்பல் மேலாண்மை புதிய முதுகலை படிப்பு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கப்படும் - புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 8:24PM by PIB Chennai

புதுவைப்  பல்கலைக்கழகத்தின் சுற்றுலா ஆய்வுத் துறை, தனது முதன்மையான இரண்டு நாள் ஆண்டாந்திர தொழில்-நிறுவன இடைமுகத் திட்டமான அகன்க்ஷா 2026-ஐ வெற்றிகரமாக நடத்தியது. 25-க்கும் மேற்பட்ட தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், சர்வதேசப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களை ஒன்றுபடுத்தி, சுற்றுலா, விருந்தோம்பல், பயணத் தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் அனுபவ சுற்றுலா போன்ற வளரும் போக்குகளை ஆராய்ந்து, கல்வி-தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தியது இந்நிகழ்வு.

துறைத் தலைவர் பேராசிரியர் சி.பி.பி.எஸ்., தொடக்க அமர்வில் கல்வி-தொழில்துறையை இணைக்கும் அகன்க்ஷாவின் பங்கையும், தொழில்நுட்பம் இயக்கும் நிலையான சுற்றுலாவில் மாணவர்களைத் தயார்படுத்துவதையும் வலியுறுத்தி வரவேற்புரையாற்றினார். இணைப் பேராசிரியரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஷெர்ரி ஆபிரகாம், சிறப்பு விரிவுரைகள், குழுவிவாதங்கள், பட்டறைகள் மற்றும் மாணவர் நடவடிக்கைகளின் நோக்கத்தைக் கூறினார். இயக்குநர்(SEI & RR) பேராசிரியர் கே.தரணிக்காரசு தலைமை தாங்கி, துறையின் உயர்தர முயற்சிகளைப் பாராட்டினார்.

தலைமை விருந்தினராக மார்வெல் டூர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு செஜோ ஜோஸ், புதுமை மற்றும் நெறிமுறை நடைமுறைகள் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்தார். லாட்வியாவின் விட்ஸேம் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக அசோசியேட் பேராசிரியர் ஆக்னஸ் டேவிட்சோன் உலகளாவிய ஒத்துழைப்புகளை எடுத்துரைத்தார்.

நிறைவு விழாவில் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு தலைமை தாங்கி, நிகழ்வின் வெற்றியையும் வேலைவாய்ப்பு அதிகரிப்பையும் எடுத்துரைத்தார். அடுத்த கல்வியாண்டு முதல் "விருந்தோம்பல் மேலாண்மை" புதிய முதுகலைத் திட்டத்தைத் தொடங்குவதாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். இது தொழில்துறைத் தொடர்பான கல்விக்கான பல்கலைக்கழக உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. பிராந்திய வளர்ச்சியில் சுற்றுலாவின் மூலோபாயப் பங்கையும், அகன்க்ஷா நுண்ணறிவுகளை கார்ப்பரேட்-தொழில்முனைவோர் தொழில்களில் பயன்படுத்துமாறு மாணவர்களையும் வலியுறுத்தினார்.

இறுதி ஆண்டு எம்பிஏ (சுற்றுலா மற்றும் சுற்றுலா மேலாண்மை) மாணவர்கள் துணை வேந்தரிடமிருந்து நியமன ஆணைகளைப் பெற்றனர். சிறப்புரைகள், குழுவிவாதங்கள், பட்டறைகள் ஆகியவற்றால் நிகழ்வு முன்னேறியது. கௌரவ விருந்தினர்கள் பேராசிரியர் ஜி.ஆஞ்சநேய சுவாமி, திருமதி ஆஷா குப்தா துறையைப் பாராட்டினர்.

டீன் பேராசிரியர் பி.நடராஜன், தலைவர் பேராசிரியர் சி.பி.பி.எஸ்., ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஷெர்ரி ஆபிரகாம், அறிஞர் ஒருங்கிணைப்பாளர் திரு கோகுலப்பிரியன் ராஜ், மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் திரு கார்த்திக் பி.பிரதீப், திருமதி பாத்திமா தெஸ்லீனா ஆகியோரும் ஆலோசனைக் குழுவும் ஏற்பாடு செய்தனர். சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்பட்டன.

***

TV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231358) வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க: English