சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
இந்திய நடுவர் கவுன்சில்
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 1:41PM by PIB Chennai
கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவை ஒரு நடுவர் மையமாக மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. இதில், 1996 ஆம் ஆண்டின் நடுவர் மற்றும் சமரசச் சட்டத்தில் 2015, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட திருத்தங்களும் அடங்கும்.
சர்வதேச வர்த்தக நடுவர் முறை உட்பட நிறுவன நடுவர் முறைக்கு வசதி செய்வதற்காக ஒரு சுதந்திரமான மற்றும் தன்னாட்சி அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் சர்வதேச நடுவர் மையம் நிறுவப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2025-ல், இந்தியா சர்வதேச நடுவர் மையம், தில்லி உயர் நீதிமன்றத்தில் 'நிறுவன நடுவர் முறை' என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு பாணி விவாதத்தை நடத்தியது. இந்த விவாதத்தில் புகழ்பெற்ற பேச்சாளர்களால் முன்வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 2025 இல், இந்தியா சர்வதேச நடுவர் மையம், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்புடன் இணைந்து 'நிறுவன நடுவர் முறை' என்ற தலைப்பில் ஒரு இணையக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது. இது வர்த்தகப் பிணக்குகளைத் தீர்ப்பதில் நிறுவன நடுவர் முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள ஏற்றுமதியாளர்களை ஒன்றிணைத்தது.
இந்தத் தகவலை, சட்டம் மற்றும் நீதித்துறை ( தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224369®=3&lang=1
***
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2224627)
வருகையாளர் எண்ணிக்கை : 7