அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
செயற்கை உயிரியலில் ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறை
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 3:56PM by PIB Chennai
பயோ இ3 கொள்கையின் (பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம்) ஒரு பகுதியாக, உயிரி அடிப்படையிலான தயாரிப்புகளின் உயிரி உற்பத்திக்காக செயற்கை உயிரியல் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
பயோ இ3 கொள்கையின் கீழ் செயற்கை உயிரியல் கருவிகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிரி அடிப்படையிலான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதை உள்ளடக்கிய ஆராய்ச்சி, தொழில்துறை பயன்பாடு மற்றும் நிலையான பொருளாதார இலக்குகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கை இந்தியாவின் பசுமை வளர்ச்சி (2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது) என்ற தொலைநோக்குப் பார்வையுடனும், நிலைத்தன்மையை நோக்கிய கூட்டு அணுகுமுறையை முன்வைக்கும் 'சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை (லைஃப்)' என்ற பிரதமரின் அறைகூவலுடனும் ஒத்துப்போகிறது. இந்தக் கொள்கையின் கீழ் உள்ள பல்வேறு முயற்சிகள், நாட்டின் 'நிகர-பூஜ்ஜிய' கார்பன் பொருளாதாரம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடனும் ஒத்துப்போகின்றன. மேலும், உயிரி உற்பத்தி மையங்கள், உயிரி ஃபவுண்டரிகள், உயிரி-செயற்கை நுண்ணறிவு மையங்களை அமைப்பது, இந்தியாவில் உற்பத்தி செய்தல் திட்டத்தை வலுப்படுத்துவதையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனுக்கு உயிரி தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் "2047-இல் வளர்ச்சியடைந்த பாரதம்" இலக்குகளும் ஒத்துப்போகின்றன.
இந்தத் தகவலை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223800®=3&lang=1
***
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224306)
வருகையாளர் எண்ணிக்கை : 7