எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்டிபிசி மேற்கு மண்டலம்–I, குஜராத் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

प्रविष्टि तिथि: 03 JAN 2026 11:33AM by PIB Chennai

மும்பையில் உள்ள தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி)– மேற்கு மண்டலம்–I தலைமையகம், கதிர்வீச்சு சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்காக குஜராத் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன்  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) முன்முயற்சியின் கீழ், அகமதாபாத்தில் உள்ள குஜராத் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சித்பூர் துணை மையத்தில் கதிர்வீச்சு சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதற்காக என்டிபிசி ரூ 23.16 கோடியை அனுமதித்துள்ளது. இந்த நிதி ஆதரவு, ஒரு உயர் ஆற்றல் லீனியர் ஆக்சிலரேட்டரை கொள்முதல் செய்து நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படும். இது மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை திறன்களை கணிசமாக மேம்படுத்துவதோடு, இப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு தரமான கதிர்வீச்சு சிகிச்சை சேவைகளுக்கான அணுகலையும் மேம்படுத்தும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின்  இயக்குநர் டாக்டர். சஷாங்க் பாண்டியா, என்டிபிசி-யின் பிராந்திய செயல் இயக்குநர் (மேற்கு–I) திரு. இ. சத்யா ஃபானி குமார் ஆகியோருக்கு இடையே, இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்த முன்முயற்சியானது, அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்கான என்டிபிசி-யின் அர்ப்பணிப்பையும், அர்த்தமுள்ள பெருநிறுவன சமூகப் பொறுப்புத் தலையீடுகள் மூலம் முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அதன் தொடர்ச்சியான கவனத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

****

AD/PKV/SH


(रिलीज़ आईडी: 2211126) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी