மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நவீன தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: மத்திய இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாதா
प्रविष्टि तिथि:
22 DEC 2025 5:30PM by PIB Chennai
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, ட்ரோன் தொழில்நுட்பம், இணையப் பொருட்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கின்றன என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தின் பிலிபித்தில் 2025 டிசம்பர் 21 அன்று அடல் பிஹாரி வாஜ்பாய் விரிவாக்க மைய வளாகத்தில் நடைபெற்ற “தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாட்டில்” உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். இளைஞர்களிடையே தொழில்நுட்ப அடிப்படையிலான திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது.
மேம்பட்ட தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை நாட்டின் தொலைதூர மற்றும் ஓரளவு நகர்ப்புறங்களுக்குக் கொண்டு செல்வதில் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207453®=3&lang=1
***
SS/PKV/SE
(रिलीज़ आईडी: 2207532)
आगंतुक पटल : 8