மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
நாட்டில் மீன்வளர்ப்புத் துறை பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது – மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 12:17PM by PIB Chennai
நாட்டின் மீன்வளர்ப்புத் துறை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. இது கடல் சார் நடவடிக்கைகளிலிருந்து உள்நாட்டு மற்றும் நீர்வாழ் உயிரின மையமாக மாறியுள்ளது. மீன்உற்பத்தியைப் பொறுத்தவரை 1950–51-ம் ஆண்டில் 7.52 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 2024-25-ம் ஆண்டில் (தற்காலிகம்) 197.75 லட்சம் டன்னாக இருந்தது. இது 26 மடங்கு அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீலப் புரட்சித் திட்டம், மீன்வளர்ப்பு மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற பெரிய முன்முயற்சிகள் மூலம் ரூ.39,272 கோடி அளவிற்கு மத்திய அரசு முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 2013-14-ம் ஆண்டில் மீன் உற்பத்தி 95.79 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 2024-25-ம் ஆண்டு (தற்காலிகம்) 197.75 லட்சம் டன்னாக 100 சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது.
இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கேள்வி ஒன்றுக்கு பதில்அளித்த போது தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205031®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2205153)
आगंतुक पटल : 15