ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பாக 2.08 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு வி சோமண்ணா
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:04PM by PIB Chennai
நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகத்திற்கான குழாய் இணைப்புகளை ஏற்படுத்துவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கம் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டில் கிராமப்புறங்களில் உள்ள 3.23 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 3.12.2025 வரை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 12.52 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அத்துறைக்கான இணையமைச்சர் திரு வி சோமண்ணா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மொத்தம் உள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளில் இதுவரை 15.75 கோடி (81.37 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்காக மொத்தம் 3.60 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 2.08 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200339®=3&lang=1
***
SS/SV/RJ/RK
(रिलीज़ आईडी: 2200487)
आगंतुक पटल : 11