தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - தமிழ்நாட்டில் இதுவரை 99.86 சதவீத படிவங்கள் விநியோகம்
प्रविष्टि तिथि:
06 DEC 2025 4:19PM by PIB Chennai
தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,40,24,854 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 99.86 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு இன்று (06.12.2025) மாலை 3 மணி வரை 6,40,24,854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, அந்தமான் நிகோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி 2025 டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ம் தேதி நிலவரப்படி, இந்த 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 50,97,44,423 ஆக உள்ளது. இதில் 50,93,62,185 படிவங்கள் (99.93%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199802®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2199883)
आगंतुक पटल : 12