எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் பரிமாற்ற இழப்புகளைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 04 DEC 2025 4:50PM by PIB Chennai

நாட்டில் மின் பரிமாற்ற இழப்புகள் உத்தேசமாக 3% முதல் 4% என்ற அளவில் உள்ளன. மத்திய மின்சார ஆணையம் நவம்பர் 2025-ல் வெளியிட்ட பொது மதிப்பீட்டு அறிக்கையின்படி, நாட்டில் 2023-24-ம் ஆண்டில் மின் பரிமாற்ற இழப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தென் மண்டலத்தில் இழப்பு 3.46 % ஆக இருந்தது.

மின் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்காக, மத்திய, மாநில மின்பகிர்வு அமைப்புகள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

* ஏற்கனவே உள்ள அமைப்பின் கட்டமைப்பு விரிவாக்கம்

* அதிக மின்னழுத்த அமைப்பை ஏற்படுத்துவது

* மின்னழுத்த தன்மையை மேம்படுத்தவும் இழப்புகளைக் குறைக்கவும் சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குதல்

இதற்கிடையில், அனைத்து வீடுகளுக்கும் தரமான மின்சாரம் வழங்கும் நோக்கத்தை அடைய உதவும் வகையில், தீன் தயாள் உபாத்யாய கிராம ஜோதி திட்டம், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் சௌபாக்யா திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் தகவலை மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் இன்று (04.12.2025) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

(Release ID: 2198781)

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2199151) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी