அணுசக்தி அமைச்சகம்
ரஷ்யாவின் ரோசாட்டம் உடனான ஒப்பந்தங்கள்
प्रविष्टि तिथि:
03 DEC 2025 6:40PM by PIB Chennai
அணுசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது, பெரிய மற்றும் சிறிய அளவிலான அணு மின் நிலையங்களுக்கான திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அணு எரிபொருள் சுழற்சியில் ஒத்துழைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தும் ஒரு சந்திப்பு அணுசக்தித் துறை மற்றும் ரோசாட்டம் இடையே நடந்தது. குறிப்பாக, இந்தியாவில் உபகரண உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அணுசக்தித் திட்டத்திற்கான 2025–26 பட்ஜெட் அறிவிப்பில், 2033 ஆம் ஆண்டுக்குள் ₹ 20,000 கோடி செலவில் ஐந்து உள்நாட்டு சிறிய மாதிரி உலைகளை உருவாக்கி பயன்படுத்துவதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வரைவு அணுசக்தி மசோதா 2025 தற்போது செயலாக்கம் மற்றும் தயாரிப்பின் மேம்பட்ட கட்டத்தில் உள்ளது. பல்வேறு அமைச்சகங்களின் இறுதி கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சட்ட இணக்கங்களுக்காக சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் ஒரே நேரத்தில் சரிபார்க்கப்படுகின்றன. மசோதாவின் குறிப்பிட்ட அம்சங்கள் தொடர்பான அரசின் கொள்கை உத்தரவுகள் ஒப்புதலுக்காக வைக்கப்படுவதற்கு முன்பு பொருத்தமான முறையில் இணைக்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198342®=3&lang=1
***
(Release ID: 2198342)
AD/BR/KR
(रिलीज़ आईडी: 2198679)
आगंतुक पटल : 20