சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட 2.910 கிலோகிராம் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
Posted On:
17 NOV 2025 3:41PM by PIB Chennai
இலங்கை விமானம் மூலம் 2025 நவம்பர் 15 அன்று பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பெண் பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது அவருடைய உடைமைகளை சோதனையிட்டபோது, குளிரூட்டும் கருவிக்குள் 2.910 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அந்த போதைப் பொருட்களின் மதிப்பு ரூபாய் 1.01 கோடியாகும்.
இதைத் தொடர்ந்து அந்தப் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

***
SS/IR/LDN/RK
(Release ID: 2190853)
Visitor Counter : 15