நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு பிரச்சாரம் 5.0 இலக்குகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெற்றிகரமாக அடைந்துள்ளது

प्रविष्टि तिथि: 04 NOV 2025 6:28PM by PIB Chennai

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள முறையீடுகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் கீழ் குறிப்பிடத்தக்க முடிவுகளை எட்டியுள்ளது.

சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் போது, வருமான வரித் துறை அனைத்து முக்கிய அளவுருக்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது. 947 என்ற இலக்கிற்கு எதிராக மொத்தம் 1,521 தூய்மை பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு, 160% சாதனையைப் பதிவு செய்தன. முறையான அகற்றல் பயிற்சிகள் மூலம், வாரியம் 1.67 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை விடுவித்தது. கழிவு மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் 32.0 லட்சம் வருவாயைப் பெற்றது. பதிவு மேலாண்மைத் துறையில், சுமார் 2.30 லட்சத்திற்கும் அதிகமான இயல் கோப்புகள் அகற்றப்பட்டன, அதே நேரத்தில் 10,000 க்கும் மேற்பட்ட மின்னணு கோப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது.

குடிமக்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளில், ஆரம்ப இலக்கான 20,954 வழக்குகளைத் தாண்டி, மத்திய நேரடி வரிகள் வாரியம் 21,251 பொதுமக்கள் குறைகளைத் தீர்த்து வைத்தது. மேலும் 831 பொதுமக்கள் குறைகளின்  மேல்முறையீடுகளை முடிவுக்குக் கொண்டு வந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:             https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2186378  

***

AD/RB/RJ


(रिलीज़ आईडी: 2186512) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी