தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, சிறப்புச் செயல்பாடு 5.0-ன் கீழ் சஞ்சார் பவனில் தூய்மை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
Posted On:
31 OCT 2025 5:30PM by PIB Chennai
தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி இன்று (31 அக்டோபர் 2025) சஞ்சார் பவனுக்கு வருகை தந்து, சிறப்புச் செயல்பாடு 5.0 இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட தூய்மை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்த பிறகு, அவர் பேசுகையில், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் காண தூய்மையும் சுய ஒழுக்கமும் மிக அவசியம் என்றார். தூய்மை என்பது ஒருமுறை செய்யும் செயல் அல்ல, அது நம் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும், தூய்மையான சூழல் ஆரோக்கியத்தையும் செயல்திறனையும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மை என்பது வெறும் இயக்கம் மட்டுமல்ல; இது 2047-ஆம் ஆண்டுக்குள் தூய்மையான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் இலக்கை நோக்கிய ஒரு படி என்று டாக்டர் பெம்மாசானி வலியுறுத்தினார்.
அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டு முயற்சியைப் பாராட்டிய அவர், இந்தச் செயல்பாட்டிற்குப் பிறகும் தூய்மை உணர்வை அன்றாடப் பணியின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடர வேண்டும் என்று ஊக்குவித்தார். 2025 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட இந்தச் சிறப்புச் செயல்பாடு 5.0 இன்று நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184722
***
AD/VK/SH
(Release ID: 2184977)
Visitor Counter : 4