மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் கீழ்  தூய்மை மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று  இயக்கத்தை மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் வழிநடத்தினார்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 1:16PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் ஒரு பகுதியாக, அக்டோபர் 29 அன்று புதுதில்லியில் ஒரு தூய்மை இயக்கத்தை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை செயலாளர் திரு நரேஷ் பால் கங்வார் மற்றும் துறையின் பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
இந்த இயக்கத்தில்  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக பங்கேற்றனர், தாயின் பெயரில் ஒரு மரக்கன்று  என்ற முன்முயற்சியின் கீழ் மரம் நடும் இயக்கமும் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184081
***
SS/PKV/KR
                
                
                
                
                
                (Release ID: 2184209)
                Visitor Counter : 6