தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஆக்ரா நகரில் தொலைத் தொடர்பு சேவையின் தரம் குறித்து ட்ராய் சோதனை நடத்தியது
प्रविष्टि तिथि:
27 OCT 2025 11:30AM by PIB Chennai
ஆக்ரா நகரில் தொலைத் தொடர்பு சேவையின் தரம் குறித்து இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) சோதனை நடத்தியது.
தில்லியில் உள்ள ட்ராயின் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் 2025 செப்டம்பர் மாதத்தில் இச்சோதனை நடத்தப்பட்டது. நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்களின் அமைவிடம், பொது போக்குவரத்துப் பகுதிகள், அதிவேக வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் மொபைல் தொலைத் தொடர்பு சேவை தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2025 செப்டம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை ட்ராய் குழுக்கள், 245.0 கி.மீ. தொலைவிற்கு நகரம் சார்ந்த சோதனை, 9 முக்கிய இடங்கள், 1 கி.மீ. தொலைவிற்கு நடைவாயிலான சோதனை உள்ளிட்டவற்றை நடத்தின.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182785
***
SS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2182842)
आगंतुक पटल : 26