பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பெருநிறுவனங்கள் விவகார கல்வி நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட நடுவர் பயிற்சி திட்டத்தின் முதலாவது பிரிவு நிறைவடைந்தது

Posted On: 14 OCT 2025 12:02PM by PIB Chennai

இந்தியப் பெருநிறுவனங்கள் விவகார கல்வி நிறுவனத்தின்  சான்றளிக்கப்பட்ட நடுவர் பயிற்சி திட்டத்தின் முதலாவது பிரிவின் நிறைவு அமர்வு மானேசரில் உள்ள இந்தியப் பெருநிறுவனங்கள் விவகார கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் 2025 அக்டோபர் 12 அன்று நடைபெற்றது. மத்திய பெருநிறுவனங்கள் விவகார அமைச்ககத்தின் இந்தியப் பெருநிறுவனங்கள் விவகார கல்வி நிறுவனத்தின் பிரச்சனைக்கான மாற்றுத் தீர்வின் திறன் மையம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. எதிர்கால உலகளாவிய நடுவர் நிபுணர்களை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த அமர்வை இந்திய சர்வதேச நடுவர் மையத் தலைவர் நீதிபதி ஹேமந்த் குப்தா 2025 அக்டோபர் 11 அன்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் நடுவர் சூழலை வலுப்படுத்துவதற்கு  இந்தியப் பெருநிறுவனங்கள்  விவகார கல்வி நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178780  

***

SS/IR/KPG/KR


(Release ID: 2179067) Visitor Counter : 6