குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் நினைவு தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2025 4:49PM by PIB Chennai

பாரத ரத்னா லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் நினைவு தினத்தையொட்டி பழைய நாடாளுமன்ற வளாகத்தில் அன்னாரது உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், அவசரநிலை பிரகடனத்தின் போது, ​​பாரத ரத்னா லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். இது மில்லியன் கணக்கான மக்களை ஜனநாயகம், குடிமை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு மாண்புகளை நிலைநிறுத்த ஊக்கப்படுத்திய 'முழுமையான புரட்சிக்கு' அழைப்பு விடுத்தது.

பத்தொன்பது வயதில் பாரத ரத்னா லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணனின் முழுப் புரட்சிக்கான அழைப்பில் சேரும் வாய்ப்பை தாம் பெற்றதாகவும், அதில் முழு வீரியத்துடன் பங்கேற்றதாகவும் திரு சி பி ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டுள்ளார். லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார் என்றும், பின்னர் பொது வாழ்வில் நேர்மை மற்றும் மக்களின் அதிகாரமளிப்புக்கான வலுவான வழக்கறிஞராக உருவெடுத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பிற்பகலில் குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் பாரத ரத்னா லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் அவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.

***

(Release ID: 2176344 )

SS/IR/AG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2176584) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam