எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மாங்கனீசு தாது நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் சாதனை அளவிலான உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது

Posted On: 04 OCT 2025 11:54AM by PIB Chennai

முக்கிய அளவுருக்களில் வலிமையான வளர்ச்சியால் இயக்கப்பட்டு, நிதியாண்டு 2026-ன் இரண்டாவது காலாண்டு மற்றும் 2025 செப்டம்பர் மாதத்தில் இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் பாராட்டத்தக்க செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தியுள்ள து.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டதை விட 3.8% கூடுதலாக, செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில், 1.52 லட்சம் டன் மாங்கனீசு இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 5,314 மீட்டர் ஆழத்திற்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 46% குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது காலாண்டு உற்பத்தி  கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் பதிவானதை விட 10.3% கூடுதலாக, அதிகபட்ச இரண்டாவது காலாண்டு உற்பத்தியாக 4.42 லட்சம் டன் பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் விற்பனை அளவு 18.6% அதிகரித்து 3.53 லட்சம் டன்னாக இருந்ததுஇரண்டாவது காலாண்டில் அதிகபட்சமாக, 21,035  மீட்டர் ஆழத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இது முந்தைய ஆண்டை விட 4.1% உயர்வாகும்.

முக்கிய அளவுருக்களில் ஏற்பட்ட வளர்ச்சி, அதன் செயல்பாட்டு சிறப்பை வலுப்படுத்துவதற்கும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்குமான  நிறுவனத்தின்  உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, என்று இந்திய மாங்கனிசு தாது நிறுவனத்தின்  தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு அஜித் குமார் சக்சேனா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174717

****

 

(Release ID: 2174717)

AD/BR/SG


(Release ID: 2174754) Visitor Counter : 10
Read this release in: English , Urdu , Hindi