சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்க அமைச்சகம் நாடு தழுவிய அளவில் மின்-கழிவுகளின் மறுசுழற்சி இயக்கத்தைத் தொடங்கியுள்ளது

Posted On: 03 OCT 2025 2:35PM by PIB Chennai

சுரங்க அமைச்சகம், சிறப்பு இயக்கம் 5.0-ன் கீழ் நாடு தழுவிய அளவில் மின்-கழிவு மறுசுழற்சி இயக்கத்தைத்  தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் அக்டோபர் 2 முதல் 31, 2025 வரை நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் தூய்மையுடன், மின்னணு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி, அதிலிருந்து வளங்களைப் பிரித்தெடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

இந்த நாடு தழுவிய இயக்கத்தில், சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜவஹர்லால் நேரு அலுமினிய ஆராய்ச்சி மேம்பாட்டு மற்றும் வடிவமைப்பு மையம் இணைந்துள்ளது. இது இந்தியாவின் முன்னணி மின்-கழிவு மறுசுழற்சி நிறுவனமான ஆட்டெரோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஆட்டெரோ, தனது காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய தாது மண் போன்ற மதிப்புமிக்க வளங்களைப் பிரித்தெடுக்கிறது. மீட்கப்பட்ட மூலப்பொருட்களை உள்நாட்டு உற்பத்தியில் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், இந்த இயக்கம் தேசிய அரிய கனிமங்கள் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது. இதன்மூலம், மின்-கழிவை ஒரு மூலோபாய வளமாக மாற்றி, தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை இந்த இயக்கம் முன்னெடுத்துச் செல்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174424

 

***

AD/SE/SH


(Release ID: 2174639) Visitor Counter : 6
Read this release in: English , Urdu , Hindi