கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் பரிசுப் பொருட்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி – புதுதில்லியில் நடைபெறுகிறது

Posted On: 23 SEP 2025 1:53PM by PIB Chennai

நடப்பாண்டில் பீகார் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பிரதமரின் நினைவுப்பரிசுகள் மின்னணு முறையில் ஏலம் விடப்படும் 7-வது நிகழ்வு புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூட அரங்கில் நடைபெறுகிறது.  மதுபனி மற்றும் சிக்கி கலையை வெளிப்படுத்தும் 40 தனித்துவம் வாய்ந்த பொருட்கள் இந்த ஏலத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்த மின்னணு ஏலம் நிகழ்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட பொருட்களை, பொதுமக்கள் வாங்குவதற்கு இந்த ஏல நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நாட்டுப்புற கலைப்பொருட்கள், கைவினை கலைஞர்கள் உருவாக்கிய பொருள்கள், விளையாட்டு நினைவுப்பரிசுகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் புனித கங்கை நதியை சுத்தப்படுத்தும் நவாமி கங்கை திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.  இந்த ஏலத்தில் இடம்பெறும் அனைத்து பொருட்களும் தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூட அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. மேலும் 2025 அக்டோபர் 02-ம் தேதி வரை pmmementos.gov.in என்ற இணையதளத்திலும் இந்தப் பரிசுப் பொருட்களை மின்னணு ஏலமுறை மூலம் பொதுமக்கள் பெற முடியும்.

***

(Release ID: 2170047 )

AD/GK/AG/KR


(Release ID: 2170180)
Read this release in: English , Urdu , Hindi