உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய உணவுப் பதனப்படுத்துதல் துறைக்கு ஊக்கமளிக்க 1.44 லட்சம் குறு உணவு பதனப்படுத்துதல் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது

Posted On: 21 AUG 2025 3:22PM by PIB Chennai

உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும், உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டம், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் ஆகிய தமது 2 மத்திய திட்டங்கள் மூலம் தொடர்புடைய உள்கட்டமைப்பை அமைப்பதற்கும், விரிவாக்குவதற்கும் ஊக்கமளித்து வருகிறது. குறு உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களை மேம்படுத்தவும், அமைக்கவும் நிதி, தொழில்நுட்ப மற்றும் வணிக ஆதரவை வழங்குவதற்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய திட்டமான பிரதமரின் குறு உணவு பதனப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல்  திட்டத்தையும் உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு மட்டுமின்றி பீகார் உட்பட தேவை சார்ந்த பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மானியம் மற்றும் ஊக்கத் தொகைகளை அமைச்சகம் வழங்குகிறது. உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் இத்திட்டங்களின் கீழ் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் தொழில் முனைவோருக்கும் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 30.06.2025 வரை மொத்தம் 1,44,517 குறு உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறைகளுக்கு நிதியுதவிக்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,16,666 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய உணவுப் பதனப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159014     

***

AD/IR/AG/DL


(Release ID: 2159415)
Read this release in: English , Urdu , Hindi