விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது செயற்கைக்கோள் ஏவுதளம்

Posted On: 06 AUG 2025 4:42PM by PIB Chennai

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது செயற்கைக்கோள் செலுத்துவதற்கான ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செயற்கைக்கோள்  செலுத்துவதற்கான தளம் அமைக்கப்படும் இடத்தில் புவிசார் தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் நிலப்பரப்புக் குறித்த கணக்கெடுப்புகள் கடந்த மே மாதம் நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தளத்திற்கு செல்வதற்கான சாலைப் பணிகள் மற்றும் மின்சார வசதிகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கட்டடப் பணிகள் திரவ அமைப்புகளை நிறுவுவது உந்து சக்தியுடன் கூடிய கிடங்கு வசதிகள் மற்றும் செயற்கைக்கோள் செலுத்துத் தளத்திற்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வரும் 2029-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்.

நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஒப்பந்த புள்ளிகள் மூலம் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற திட்டத்தின் கீழ், பணிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகள் மற்றும்  தேர்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின் இத்திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்கள் கிடைக்கப்பெறும்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

 (Release ID: 2153096)

AD/SV/KPG/DL


(Release ID: 2153253)
Read this release in: English , Urdu , Urdu , Hindi