தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
உயர்கல்வி நிறுவனங்களில் 5ஜி சேவைகளை உறுதி செய்யும் வகையில் பயன்பாட்டு அடிப்படையிலான ஆய்வகங்கள்
प्रविष्टि तिथि:
24 JUL 2025 4:25PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 4.86 லட்சம் 5ஜி அலைக்கற்றை பரிமாற்ற நிலையங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 5ஜி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 100 பயன்பாட்டு அடிப்படையிலான ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஆய்வகப் பணிகளில் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில் சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147766
**
AD/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2147960)
आगंतुक पटल : 15