ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளித் துறையில் உட்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது: திரு கிரிராஜ் சிங்

Posted On: 22 JUL 2025 3:08PM by PIB Chennai

தேசிய மற்றும் சர்வதேச அளவில் வர்த்தக கண்காட்சிகள், வாங்குபவர்-விற்பனையாளர் இடையேயான சந்திப்புகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து பங்கேற்பதற்காக, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு குழுமங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது.

இந்திய ஜவுளி மதிப்பின் வலிமையை வெளிப்படுத்தவும், ஜவுளி மற்றும் ஆடை அலங்காரத் துறையில் சமீபத்திய முன்னேற்றம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தவும், ஜவுளித் துறையில் ஆதாரம் மற்றும் முதலீட்டிற்கு இந்தியாவை மிகவும் விருப்பமான இடமாக நிலைநிறுத்தவும், உலகளாவிய மெகா ஜவுளி நிகழ்வை அதாவது பாரத் டெக்ஸ் 2025 ஐ ஏற்பாடு செய்வதில் ஜவுளி அமைச்சகம், ஏற்றுமதி மேம்பாட்டு குழுமங்கள் மற்றும் சங்கங்களுக்கு ஆதரவளித்துள்ளது.

போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக, ஆடைகள் தயாரிப்புகளுக்கான மாநில, மத்திய வரிகள் மற்றும் வரிகளை தள்ளுபடி செய்யும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்திய ஜவுளித் துறையை மேம்படுத்தவும் அதன் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. நவீன, ஒருங்கிணைந்த, உலகத் தரம் வாய்ந்த ஜவுளி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை (பிரதமரின் மித்ரா) பூங்காக்கள் திட்டம், ஆராய்ச்சி புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாடு, ஊக்குவிப்பு மற்றும் சந்தை மேம்பாட்டில் கவனம் செலுத்தும் தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டுக்கான சமர்த் திட்டம் ஆகியவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், தேசிய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறித் துறைக்கு நேரடி ஆதரவு வழங்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் மக்களவையில் இன்று ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

AD/IR/SG/KR


(Release ID: 2146852)
Read this release in: Urdu , English , Hindi