கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இ.டி. எட்ஜ் எஸ்சிஎம் விழா 2025: உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் நீர் வழிகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு விருது

Posted On: 28 JUN 2025 4:55PM by PIB Chennai

எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஊடக நிறுவனம் சார்பில் 2025 ஜூன் 26-27 தேதிகளில் புது தில்லியில் நடைபெற்ற .டி. எட்ஜ் விநியோகச் சங்கிலி மேலாண்மை (எஸ்சிஎம்) விழா-2025-ல், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம், (IWAI) ஜல் மார்க் விகாஸ் எனப்படும் நீர் வழிகள் மேம்பாட்டுத் திட்டத்தை (JMVP) செயல்படுத்தியதற்காக சங்கல்ப் சே சித்தி' எனப்படும் வெற்றிக்கான தீர்மானம் எனும் உள்கட்டமைப்பு விருதைப் பெற்றுள்ளது.

தேசிய நீர்வழி-1-ன் (கங்கை நதி) திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், தற்போது உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியா வரை 1390 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆற்றுப் பகுதியில் ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களைக் கடந்து செல்கிறது.

தேசிய நீர்வழி-1-ன் ஒன்பது பிரிவுகள் கங்கை நதியின் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துகிறது. இந்த திட்டம் உலக வங்கியின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

'சங்கல்ப் சே சித்தி உள்கட்டமைப்பு விருதுஇந்தியாவில் உள்நாட்டு நீர் போக்குவரத்து துறையை மேம்படுத்த நீர்வழிகள் ஆணையம் மேற்கொண்ட சிறந்த உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஒரு சான்றாகும்.

ஜல் மார்க் விகாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின் இந்தத் தடத்தில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. மேலும், உலகின் மிக நீண்டதூர நதிக் கப்பல் பயணமான கங்கா விலாஸின் வெற்றி, கங்கையில் நதி கப்பல் சுற்றுலாவில் புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது.

.டி. எட்ஜ் எஸ்சிஎம் விழா-2025-ல், உள்நாட்டு நீர்வழிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் தலைமைப் பொறியாளர் மற்றும் திட்ட மேலாளர் திரு அருண் குமார் மிஸ்ரா, ஆணையத்தின் சார்பாக விருதைப் பெற்றுக் கொண்டார்.

****

 

(Release ID: 2140424)

AD/TS/PLM/SG

 

 


(Release ID: 2140439)
Read this release in: English , Urdu , Marathi , Hindi