பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறந்த ஆளுகை நடைமுறைகளை பரவலாக்கவும், பிரதிபலிக்கவும் தேசிய நல் ஆளுகை இணையக் கருத்தரங்கு தொடர் 2025-26-ன் 28-வது இணையக்கருத்தரங்கு ‘மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி’ என்ற மையப்பொருளில் 2025 ஜூன் 26 அன்று நடைபெற்றது
Posted On:
26 JUN 2025 3:50PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தேசிய நல் ஆளுமை குறித்த இணைய வழி கருத்தரங்குகளை 2022 ஏப்ரல் முதல் ஒவ்வொரு மாதமும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை நடத்தி வருகிறது. சிறந்த நடைமுறைகளை பரவலாக்குவதையும், பிரதிபலிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த தொடரில் 28-வது இணையக்கருத்தரங்கு ‘மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி’ என்ற மையப்பொருளில் 2025 ஜூன் 26 அன்று நடைபெற்றது. இதில் பொது நிர்வாகத்தில் தலைசிறந்தவர்களுக்கு 2024-ம் ஆண்டுக்கான பிரதமரின் விருது வழங்கப்பட்ட இரண்டு முன்னெடுப்பு திட்டங்கள் உள்ளடங்கும்.
இந்த கருத்தரங்கிற்கு நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கினார். துறையின் கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இணைய வழியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து 850-க்கும் அதிகமான இடங்களிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாக சீர்திருத்த துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள், மத்திய, மாநில நிர்வாக பயிற்சி நிறுவனங்களின் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் முன்முயற்சிகள் குறித்து அம்மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆயுஷி சுதன் விவரித்தார். இதேபோல் அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்ட முன்முயற்சிகள் குறித்து அம்மாவட்ட ஆணையர் திரு ஸ்வப்நீல் பால் விவரித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139815
***
AD/TS/SMB/AG/KR/DL
(Release ID: 2139933)