வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமை தாங்கினார்

Posted On: 25 JUN 2025 3:09PM by PIB Chennai

இந்தியா மற்ற நாடுகளை விட போட்டி அனுகூலத்துடன் இருக்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியடைய பல்வேறு பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உற்பத்தித் துறையில் இந்தியாவை "தற்சார்பு" நிலையை அடைய செய்வதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்றான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டம் (பிஎல்ஐ) குறித்த ஆய்வுக் கூட்டத்தில் திரு கோயல் இவ்வாறு கூறினார்.

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வரும் முக்கியத் துறைகளில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தையும் திரு கோயல் வலியுறுத்தினார்.  முதலீடு, விநியோகம் ஆகியவற்றில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு செயல்திட்டத்தை தயாரிப்பது குறித்து வலியுறுத்தினார்.

பி.எல்.ஐ திட்டம் 14 முக்கியத் துறைகளில் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் ரூ. 1.76 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளைக் கொண்டுள்ளது. இது 2025 மார்ச் மாதம் வரை ரூ. 16.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மேல் உற்பத்தி/விற்பனையை கண்டுள்ளது. 12 லட்சத்திற்கும் அதிகமான (நேரடி மற்றும் மறைமுக) வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப வன்பொருள், மருத்துவ சாதனங்கள், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், வாகன உதிரி பாகங்கள், சிறப்பு எஃகு, ஜவுளி மற்றும் ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்கள் போன்ற 12 துறைகளுக்கு பிஎல்ஐ திட்டங்களின் கீழ் ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ. 21,534 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139489

***

(Release ID: 2139489)

AD/TS/IR/AG/KR

 


(Release ID: 2139601)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati