உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மனம், உடல், ஆன்மா இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த யோகாவே சரியான தீர்வு: சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு

Posted On: 21 JUN 2025 4:00PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து, 11-வது சர்வதேச யோகா தினத்தை இன்று புதுதில்லியில் உள்ள ராஜீவ் காந்தி பவனில் உள்ள விமானப் போக்குவரத்துப் பூங்காவில் உற்சாகத்துடன் கொண்டாடியது. விமானப் போக்குவரத்துத் துறையில் உடல், மன, ஆன்மீக நல்வாழ்வுக்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. சான்றளிக்கப்பட்ட நிபுணர்கள் தலைமையிலான யோகா நெறிமுறை அமர்வு இதில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு சமீர் குமார் சின்ஹா, விமான நிலையங்கள் ஆணைய தலைவர் திரு விபின் குமார், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின் போது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடுவின் சிறப்பு வீடியோ செய்தி ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக சிவில் விமானப் போக்குவமரத்து அமைச்சகத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

மனம், உடல், ஆன்மா இடையே நல்லிணக்கத்தை அடைவதற்கு யோகா சரியான தீர்வாகும் என்றும், வேதங்கள், உபநிடத நூல்களிலிருந்து தோன்றிய இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாத்த நமது முன்னோர்களுக்கு நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் திரு ராம் மோகன் நாயுடு தனது செய்தியில் கூறினார். யோகாவை மீண்டும் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

உடல் திறன் இந்தியா இயக்கம், உடல் பருமன் எதிர்ப்பு இயக்கம் அல்லது யோகா தின கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும், பிரதமர் திரு நரேந்திர மோடி நம்மை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிப்பதற்காக ஏராளமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் என்றும், ஒவ்வொரு ஆண்டும் நாம் மிகுந்த உற்சாகத்துடன் யோகா தினத்தைக் கொண்டாடி வருகிறோம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

****

(Release ID: 2138393)

AD/PLM/RJ


(Release ID: 2138637)
Read this release in: English , Urdu , Hindi