மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது

Posted On: 21 JUN 2025 11:01AM by PIB Chennai

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் , 11-வது சர்வதேச யோகா தினத்தை  "ஒரு பூமிக்கான யோகா, ஒரு ஆரோக்கியம்" என்ற கருப்பொருளுடன் ஜூன் 21, 2025 அன்று புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் கொண்டாடியது. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, மீன்வளத் துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி மற்றும் அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் 'சர்வதேச யோகா தினம்-2025' அன்று யோகா-சங்கத்தில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் விசாகப்பட்டினத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் நேரடி ஒளிபரப்பையும் பங்கேற்பாளர்கள் கண்டுகளித்தனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பல்வேறு யோகா ஆசனங்கள் நிகழ்த்தப்பட்ட யோகா அமர்வு நடைபெற்றது. அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு யோகா பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டதோடு, தங்கள் உள்ளத்துடன் இணைவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்தக் கூட்டு முயற்சியின் மூலம், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், துடிப்பான மற்றும் இணக்கமான பணி கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் அமைச்சகம் தனது உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது. அமைச்சகத்தின் கள நிறுவனங்களும் 11-வது சர்வதேச யோகா தினத்தை,  அந்தந்த தலைமையகங்கள் மற்றும் பிராந்திய பிரிவுகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடின.

****

(Release ID: 2138236)

AD/PKV/RJ


(Release ID: 2138611)
Read this release in: English , Urdu , Hindi