மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஸ்ரீநகரில் இணையதள பாதுகாப்பு குறித்த பயிலரங்கு
Posted On:
18 JUN 2025 12:38PM by PIB Chennai
மத்திய மின்னணுவியல் அமைச்சகத்தின் மின்-ஆளுமைப் பிரிவும் ஜம்மு - காஷ்மீர் அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து, 16-06-2025, 17-06-2025 ஆகிய தேதிகளில் ஸ்ரீநகரில் இணையதளப் பாதுகாப்பு மற்றும் நெருக்கடி மேலாண்மை தொடர்பான இரண்டு நாள் பயிலரங்கை நடத்தின.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அளவில் நடத்தப்பட்ட இந்த பயிலரங்கில் நிர்வாகச் செயலாளர்கள், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அடிப்படை இணையதள பாதுகாப்பு குறித்த தகவல்கள், அவசரகால மேலாண்மை திட்டமிடல் ஆகியவை தொடர்பான பயிற்சிகளை வழங்கி அந்த அதிகாரிகளை தயார்படுத்துவதே இந்த பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
தொடக்க அமர்வில் ஜம்மு காஷ்மீர் அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு சதீஷ் சர்மா கலந்து கொண்டார். தற்போதைய டிஜிட்டல் நிர்வாக சூழலில் இணைய தள பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற பல்வேறு அமர்வுகளில் விளக்க உரை நிகழ்வுகள், இணையதள பாதுகாப்பு கட்டமைப்புகள், தயார்நிலை பற்றிய நடைமுறை புரிதலை ஊக்குவிப்பதற்கான பயிற்சிகள் ஆகியவை அடங்கும்.
டிஜிட்டல் அதிகாரம் பெற்ற நிர்வாகத்தை உருவாக்குதல், அரசின் தகவல் தொழில்நுட்ப நடைமுறைகளின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துதல் ஆகிய பரந்த இலக்குகளுடன் இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2137135
***
VJ/PLM/AG/KR
(Release ID: 2137323)