அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆய்வு
Posted On:
17 JUN 2025 5:37PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், நாகாலாந்து அரசின் முக்கிய துறைகள் குறித்து அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அறிவியல் தொழில்நுட்பும் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் குறித்த துறைகளில் மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கையால், அப்பகுதிகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். அறிவியல் முன்னேற்றத்தை நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு, குறிப்பாகப் வடகிழக்கு மாநிலங்களுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டார்.
வளமான பல்லுயிர் பெருக்கம், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், சுற்றுலா, திரைப்படத் தயாரிப்பு உள்ளிட்டவை இந்தப் பகுதியின் நிலையான வளர்ச்சிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் வோக்கா மாவட்டத்தில் வாழை சாகுபடி வெற்றிகரமான மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராட்டினார். இது இந்தப் பகுதிக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதாகவும், இதுபோன்ற திட்டங்கள் மூலம் பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம் இந்த பிராந்தியத்தின் தனித்துவமான பலத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, வடகிழக்கு பகுதிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் இப்பிராந்தியத்திற்கு குறைந்தபட்சம் 70 முறை பயணம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாடு தழுவிய அளவிலான வளர்ச்சியிலிலிருந்து இந்தப் பிராந்தியம் விலகியிருப்பதற்கான தடைகளை களைவதே பிரதமரின் முக்கிய குறிக்கோள் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2136970
***
GK/RJ/DL
(Release ID: 2136999)