பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு உறுதி : பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர்
Posted On:
17 JUN 2025 2:05PM by PIB Chennai
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சேவைகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆய்வு செய்தார். அங்கன்வாடி பணியாளர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடினார்.
உள்கட்டமைப்பில் மாற்றம், டிஜிட்டல் கருவிகள் அறிமுகம், பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவை அங்கன்வாடி மையங்களை அத்தியாவசிய சேவைகளை சிறப்பாக வழங்கும் வகையில் மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அங்கன்வாடிகள் ஊட்டச்சத்து வழங்கும் மையங்களாக மட்டுமின்றி, நவீனகால குழந்தைப் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான மையங்களாக மாறியுள்ளதாகவும் இணையமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்றும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை அமைச்சர் எடுத்துரைத்தார். கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், அதிகாரம் அளிக்கப்பட்டவர்களாகவும், தன்னிறைவு பெற்றவர்களாகவும் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்வது, பெண் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பது, நிதி மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்டவை இந்த பத்தாண்டுகளில் மகளிர் சக்தி தலைமையிலான புதிய இந்தியாவிற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136898
***
VL/GK/RJ/KR
(Release ID: 2136955)