ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானின் பீகார் பயணம்

Posted On: 16 JUN 2025 7:00PM by PIB Chennai

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று நடைபெற்ற தியாகி புத்த நோனியாவின் நூற்றாண்டு விழாவில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் திருமதி. ரேணு தேவி, பீகார் துணை முதல்வர்கள் திரு. சாம்ராட் சௌத்ரி மற்றும் திரு. விஜய் குமார் சின்ஹா, மாநில பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் டாக்டர். திலீப் ஜெய்ஸ்வால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வில், தியாகி புத்த நோனியா பிறந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மிகுந்த பெருமைக்குரிய விஷயம் என்று திரு. சவுகான் கூறினார். பாட்னாவில் தியாகியின் சிலையை நிறுவ முடிவு செய்ததற்காக பீகார் அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

புத்த நோனியாவின் தியாகத்தை நினைவு கூர்ந்த திரு சவுகான், ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரத்தை வெள்ளித் தட்டில் வைத்து வழங்கவில்லை. இதற்காக ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் தூக்கு மேடையை புன்னகையுடன் தழுவினார்கள் என்று கூறினார். “நாம் தீவிரமான போராட்டம் மற்றும் தியாகம் மூலம் நமது சுதந்திரத்தைப் பெற்றோம். பல புரட்சியாளர்கள் தங்கள் இளமைப் பருவம் முழுவதையும் அந்தமான் மற்றும் நிக்கோபார் சிறைகளில் கழித்தனர், அவர்கள் தூக்கு மேடையை நோக்கி நடந்தபோது, ​​அவர்களின் கால்கள் நடுங்கவில்லை. பயமோ பதட்டமோ இல்லை. அவர்கள் ஒரு கையில் கீதையைப் பிடித்துக்கொண்டு, ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று கோஷமிட்டனர், மேலும் அவர்களின் இதயங்களில் அசைக்க முடியாத உறுதியைக் கொண்டிருந்தனர்”, என்று அவர் கூறினார்.

 

ஏழைகள், பின்தங்கியவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை திரு சவுகான் மீண்டும் வலியுறுத்தினார். சமூகத்தின் கடைசி நபரை உயர்த்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் உறுதிப்படுத்தினார். பீகாரிலும், தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கும். மேலும், பெண்களின் கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையை உறுதி செய்வதற்காக ‘லட்சாதிபதி சகோதரிகள்' எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு  நரேந்திர மோடியின் 'வளர்ந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் அனைவரும் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136766

 

***

(Release ID: 2136766)

AD/RB/DL


(Release ID: 2136823)
Read this release in: English , Urdu , Hindi