தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான தொலைத் தொடர்பு சேவைகளின் வெளிப்படையான சோதனை அறிக்கையின் முடிவுகளை டிராய் வெளியிட்டுள்ளது
Posted On:
16 JUN 2025 4:16PM by PIB Chennai
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகளின் தரம் குறித்த தனிப்பட்ட ஏஜென்சி சோதனைகளின் முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த சோதனை ஏழு உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளில் ஒன்பது நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. அதாவது பாலக்காடு, வாரணாசி, தில்லி (நகரம் & நெடுஞ்சாலை), கட்டாக், ஜோத்பூர், பாட்னா, காங்டாக், பாக்யாங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் குறித்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை நிகழ்நேர செயல்திறனை மதிப்பிடும் வகையில் நடத்தப்பட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் குறித்த மதிப்பாய்வை இந்திய தொலைத் தடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடத்தி வருகிறது. சேவைகளின் தரத்தை தணிக்கை செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்வேறு நிலப்பரப்பு கொண்ட சூழல்களில் ஆணைய அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ், அளவீடு செய்யப்பட்ட உபகரணங்கள் மற்றும் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட ஏஜென்சி மூலம் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களில் குரல் மற்றும் தரவு ஆகியவற்றின் தரங்கள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டன. பாரதி ஏர்டெல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனம், பிஎஸ்என்எல்/எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்களின் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் சோதனைகளின் தேவைக்கேற்ப தானியங்கி முறையில் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136667
***
AD/TS/SV/AG/DL
(Release ID: 2136762)