பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மே 2025-ம் ஆண்டுக்கான மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் செயல்பாடுகள் குறித்த நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை
Posted On:
16 JUN 2025 11:59AM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை, மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டு மே மாதத்திற்கான இந்த அறிக்கையை மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் பயனுள்ள செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன:
பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் திரு பிரேம் தீப் குறித்த அறிக்கை:
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியப் பலன்களை பெறுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த திரு பிரேம் தீப், பலன்களைப் பெறுவதில் காலதாமதத்தை எதிர்கொண்டார். மேலும் ரூ.90,936 நிலுவைத் தொகை மற்றும் ரூ.6,492 அஞ்சல் காப்பீட்டு தொகை பெறுவது தொடர்பாக புனேயில் உள்ள பாதுகாப்பு கணக்கு முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரியை பலமுறை முயற்சி மேற்கொண்ட போதும், எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புக்கான இணைய தளத்தில் தனது நிலுவைத் தொகை பெறுவது தொடர்பான கோரிக்கை மனுவை தாக்கல் செய்தார். இதனை மதிப்பாய்வு செய்த அதிகாரிகள் காப்பீட்டு தொகை மற்றும் நிலுவைத் தொகை தொடர்பான கணக்குகள் சரிபார்க்கப்பட்டு ரூ.76,808 விடுவிப்பதையும் உறுதிசெய்தனர். இதனையடுத்து அவரது நிலுவைத் தொகை தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டது.
வரிபிடித்தம் செய்ததில் உள்ள பிழைகள் திருத்தப்பட்டு கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்பப் பெறுவது தொடர்பான திரு சியோபிரசாத் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தனி நபர் சம்பளத்திற்கு வருமான வரி செலுத்தும் நபரான திரு சியோபிரசாத், 2014–15-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான தனது வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்து, ரூ.16,536 அளவிலான கூடுதல் வரியை திரும்ப பெற்றதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், கூடுதல் வரி பிடித்தம் செய்ததற்கான தொகையை விடுவிக்காமல் கூடுதலாக ரூ.16,560 வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதனையடுத்து திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மீது எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாமல் பிரிவு 220(2)-ன் கீழ் கூடுதல் வட்டி விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு தீர்வு காணக் கோரி, அவர் மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புக்கான இணையதளத்தில் தனது குறை தொடர்பான மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை மதிப்பாய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிழைகளைச் சரிசெய்து ரூ.18,360 அவரது மறுமதிப்பீடு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136560
***
(Release ID: 2136560)
AD/TS/SV/AG/KR
(Release ID: 2136617)