மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய ஆயுத காவல் படைகள் தேர்வு (உதவி கமாண்டன்ட்கள்) 2024-இன் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Posted On: 13 JUN 2025 7:36PM by PIB Chennai

ஆகஸ்ட் 04, 2024 அன்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் மத்திய ஆயுத காவல் படைகளின் உதவி கமாண்டன்ட்கள் பணிக்கான தேர்வு நடைபெற்றது. 05.05.2025 முதல் 05.06.2025 வரை நேர்காணல் நடைபெற்றது. அதன் அடிப்படையில், மத்திய ஆயுத காவல் படைகளான எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை மற்றும் சாஸ்திர சீமா பால் படைகளுக்கு உதவி கமாண்டன்ட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 459 பேர் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 160 பேர் பொதுப் பிரிவினர் ஆவார்கள்.  54 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர்.  127 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 80 பேர் பட்டியல் வகுப்பினர். 38 பேர் பட்டியல் பழங்குடியினர்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு தொடர்பான தகவல்களை வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேரிலோ அல்லது 011-23385271/ 23381125 என்ற எண்கள் மூலமாகவோ பெறலாம்.  முடிவுகளை http://www.upsc.gov.in என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் காணலாம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136247

 

***

(Release ID: 2136247)

AD/RB/DL


(Release ID: 2136277)
Read this release in: English , Urdu , Hindi