பாதுகாப்பு அமைச்சகம்
இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம் லசந்த ரோட்ரிகோ இந்தியாவிற்கு வருகை
Posted On:
11 JUN 2025 4:59PM by PIB Chennai
இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம் லசந்த ரோட்ரிகோ, 2025 ஜூன் 11 முதல் 14 வரை அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும், புதிய வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்புத் துறையில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் பரஸ்பரம் நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
அவரது இந்தியப் பயணத்தின் முதல் நாளான இன்று புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம் லசந்த ரோட்ரிகோ அஞ்சலி செலுத்தினார்.
தெற்கு பிளாக் புல்வெளிகளில் லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம். லசந்தா ரோட்ரிகோவுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவின் அடையாளமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியத்தை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப் படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகளில் விரிவான பாதுகாப்பு தொடர்பான கருத்துகள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து இலங்கை ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம். லசந்தா ரோட்ரிகோ, இந்திய - இலங்கை ராணுவத்தின் நல்லுறவைக் குறிக்கும் வகையில் மானெக்ஷா மையத்தில் ஒரு மரக்கன்று நட்டார்.
***
(Release ID: 2135712)
AD/TS/SV/RR/KR/DL
(Release ID: 2135764)