கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் சாதனைகளை விமர்சிக்கும் உரிமையை காங்கிரஸ் இழந்துவிட்டதாக அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பதிலடி கொடுத்துள்ளார்

Posted On: 10 JUN 2025 6:30PM by PIB Chennai

கடந்த 11 ஆண்டுகளாக திரு மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி செய்து வரும் விமர்சனங்களுக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் கடும் கண்டனம் தெரிவித்து, மக்களின் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி "விமர்சிக்கும் உரிமையை இழந்து விட்டது" என்று கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஏற்பட்ட மாற்றத்தக்க முன்னேற்றத்தை வலியுறுத்திய அமைச்சர், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக மக்களின் விருப்பங்களைப் புறக்கணித்த காங்கிரஸ், இப்போது செயல்திறனுக்கு வெகுமதி அளிக்கும் மற்றும் அலட்சியத்தைத் தண்டிக்கும் ஒரு புதிய இந்தியாவின் முன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

"காங்கிரஸ் அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்துவிட்டது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டை தவறாக ஆட்சி செய்தபோது வடகிழக்கு மாநிலத்தின் எதிர்காலத்தை அவர்கள் அழித்துவிட்டனர். காங்கிரஸ் அரசுகளின் இருண்ட நாட்கள் வன்முறை, கிளர்ச்சி, பயங்கரவாதத்தால் நிரம்பியிருந்தன, அவை நமது அழகிய பிராந்தியத்தை இழப்பு, பேரழிவு, முரண்பாடு மற்றும் பிரிவினையின் சுழலுக்கு தள்ளின. பிராந்தியத்தை மாற்றுவதற்கும், மக்களின் அபிலாஷைகளை மதிப்பதற்கும், தீர்வுகளைக் கண்டறிவதற்கும், அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கும், இறுதியில் அதை புதிய இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றுவதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் துடிப்பான தலைமையால் மட்டுமே இந்த நிலைமை தலைகீழாக மாறியது," என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.

 

ஷில்லாங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 11 ஆண்டுகால முக்கிய சாதனைகளை எடுத்துரைத்தார். ஏழைகளின் நலனை மேம்படுத்துதல், 'மகளிர் சக்தி' மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், வேளாண்மையை விவசாயிகளின் நலன் சார்ந்ததாக மாற்றியமைத்தல் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா அல்லது டிஜிட்டல் இந்தியா பிரச்சாரங்கள் மூலம் புதுமையான கொள்கை நடவடிக்கை மூலம் திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் மூலம் இளைஞர்களை மேம்படுத்துதல், உள்ளிட்ட திட்டங்களுடன், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் முன் எப்போதும் இல்லாத வகையில் நலத்திட்டங்களை மத்திய அரசு எவ்வாறு வழங்கியது என்பதை விளக்கினார்.

 

"பிரதமர் திரு நரேந்திர மோடியின் துடிப்பான தலைமையின் கீழ், இந்த அமிர்தக் காலத்தில் 'சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன்’ ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், வளர்ந்த பாரத்தைக் கட்டியெழுப்ப அரசு தீவிரம் காட்டி வருகிறது" என்று திரு சர்பானந்த சோனோவால் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135453

 

***

(Release ID: 2135453)


AD/RB/DL


(Release ID: 2135519)
Read this release in: English , Urdu , Hindi